Header

Sri Lanka Army

Defender of the Nation

12th December 2022 15:03:15 Hours

64 வது படைப்பிரிவு ஆண்டு நிறைவை முன்னிட்டு அனுராதபுரம் நோயாளர்களுக்கு இரத்தம் தானம்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 64 வது காலாட் படைபிரிவின் 130 இற்கும் மேற்பட்ட படையினர், வியாழன் (டிசம்பர் 08) படைப்பிரிவின் 14 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சமூகம் சார்ந்த முக்கியத்துவத்தை வழங்கும் நிமித்தம் 64 வது காலாட்படை பிரிவு தலைமையக வளாகத்தில் அனுராதபுரம் வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து இரத்த தான நிகழ்வை முன்னெடுத்தனர்.

இந்த உயிர் காக்கும் திட்டமானது 64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க எரியகம அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 64 வது படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் ஏ டி ஹாஜி அவர்களின் ஒருங்கிணைப்பில் வைத்தியசாலையின் 10 பேர் கொண்ட மருத்துவக் குழுவினரின் உதவியுடன் மேற் கொள்ளப்பட்டது.

அநுராதபுரம் இரத்த வங்கியினரின் கோரிக்கைக்கு உடனடியாக பதிலளி க்கும் வகையில் நோயாளிகளின் முக்கியமான தேவைகளை கருத்தில் கொண்டு இரத்த பற்றாக்குறையை நிவர்த்திக்கும் முகமாக 64 வது காலாட் படைபிரிவில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மொத்தம் 130 பேர் தங்கள் ஆண்டு நிறைவையொட்டி தங்கள் இரத்தத்தை தானமாக வழங்கினர் என்பது குறிப்பிடதக்கதாகும்.