11th December 2022 21:54:01 Hours
8 வது விஜயபாகு காலாட் படையினரால் படையணியின் 29வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மன்னார் - தேசிய இரத்த வங்கி கிளையின் மருத்துவ ஊழியர்களுடன் இணைந்து சனிக்கிழமை (3) மன்னாரில் உள்ள நோயாளர்களின் நலன் கருதி முகாம் வளாகத்தில் இரத்ததானம் வழங்கினர். இந்நிகழ்வில் 8 வது விஜயபாகு காலாட் படையணியின் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டவர்களின் பங்களிப்புடன் இரத்த தானம் வழங்கப்பட்டது.
ஆண்டு நிகழ்வை முன்னிட்டு டிசம்பர் 01 ஆம் திகதி உயிரிழந்த போர்வீரர்களை நினைவுபடுத்தும் வகையில் மகா சங்க உறுப்பினர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன், பிரதேசத்திலுள்ள 25 ஆதரவற்ற குடும்பங்களுக்கு இலவச உலர் உணவு பொதிகளும் வழங்கப்பட்டது. 542 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஷிஹான் பெர்னாண்டோ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
8 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரி மேஜர் ஜி.என்.பீ.ஆர். சில்வாவை வரவேற்கும் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் ஆண்டுவிழா நாள் உள்ளடக்கியிருந்தது. ஒரு நாக மரக்கன்று நடுதல், படையினருக்கு உரை, குழு படம் மற்றும் அனைத்து நிலைக்குமான மதிய உணவு ஆகியவை நிகழ்வைக் குறிக்கும் மற்ற திட்டங்களில் அடங்கும். அடுத்த நாள் ஒரு கிரிக்கெட் போட்டி அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு இடையில் நடைப்பெற்றது.