Header

Sri Lanka Army

Defender of the Nation

10th December 2022 13:10:13 Hours

இலங்கை பொறியியல் படையணியின் புதிய தளபதி பதவியேற்பு

இலங்கை பொறியியல் படையணியின் 22 வது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன அவர்கள் பனாகொட இலங்கை பொறியியல் படையணிதலைமையக வளாகத்தில் திங்கட்கிழமை (டிசம்பர் 05) நடைபெற்ற நிகழ்வின் போது சமய ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

புதிய படைத் தளபதியை, இலங்கை பொறியியல் படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் மனோஜ் மதுரப்பெரும அவர்கள் அன்புடன் வரவேற்றார். வருகை தந்த தளபதிக்கு வளாகத்தின் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து, தாய்நாட்டின் சார்பாக உயிர் தியாகம் செய்த இலங்கை பொறியியல் படையணியின் வீரமரணம் அடைந்த மாவீரர்களின் நினைவுத்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

படையணி தலைமையகத்தில் உள்ள சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் மகா சங்க உறுப்பினர்களின் ‘செத்பிரித்’ பராயணங்களுக்கு மத்தியில் மேஜர் ஜெனரல் மகிந்த ஜயவர்தன அவர்கள் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர் படையினர்களுக்கு உரையாற்றுவதற்கு முன், அனைத்து படையினர்களுக்குமான தேநீர் விருந்து உபசாரத்தில் கலந்துக் கொண்டார்.