09th December 2022 14:35:28 Hours
எம்பிலிப்பிட்டிய இலங்கை இராணுவப் பொறியியல் பாடசாலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கேணல் கிரிஷான் மனோகரன் அவர்கள் இலங்கை இராணுவப் பொறியியல் பாடசாலையின் புதிய தளபதியாக வியாழக்கிழமை (8) கடமைகளைப் பொறுப்பேற்றார்.
வருகை தந்த புதிய தளபதிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், சிரேஷ்ட அதிகாரிகளால் புதிய அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அதனை தொடர்ந்து, தனது புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதை குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். தனது வருகையை நினைவு சேர்க்கும் வகையில் வளாகத்தில் மரக்கன்றினை நாட்டியதுடன் படையினர்களுக்கு உரையாற்றினார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.