06th December 2022 19:57:25 Hours
கொழும்பு றோயல் கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான முகாமில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் கீழுள்ள படைப்பிரிவுகள், பிரிகேட்கள் மற்றும் படையலகுகளில் கடமையாற்றும், 50 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களினால் இரத்ததானம் செய்யப்பட்டது.
கொழும்பு வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு இரத்தம் பெற்றுக் கொள்ளும் வகையில் றோயல் கல்லூரியின் பழைய மாணவர்களினால் இந்நிகழ்வு செவ்வாய்கிழமை (6) ஏற்பாடு செய்யப்பட்டதுடன், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய அமைய அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் தானாக முன்வந்து இரத்ததான நிகழ்வில் கலந்து கொண்டனர்.