09th December 2022 15:59:38 Hours
இந்தியாவிலுள்ள செனகல் தூதரகத்தின் இலங்கைக்கான இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை இணைப்பாளர் கேணல் அப்துலயே ட்ரௌர் அவர்கள் வெள்ளிக்கிழமை (9) இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை சந்தித்தார்.
இருவருக்குமான உரையாடல்களின் போது, கேணல் அப்துலயே ட்ரௌர் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான விடயங்கள் தொடர்பாக கருத்துகளை பரிமாறிக் கொண்டார். இருவரது நல்லெண்ணத்தை மேலும் மேம்படுத்தவும், இராணுவ விவகாரங்களில் அறிவைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த சந்திப்பு வழி வகுத்ததுடன் சந்திப்பின் நினைவாக நினைவுச்சின்னங்கள் பரிமாறிகொண்டனர்.
கேணல் அப்துலயே ட்ரௌர் தற்போது இலங்கையில் உள்ள சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திரத்திற்கான 5வது பாதுகாப்பு இணைப்பாளர் நோக்குநிலை பாடநெறியை பின்பற்றுகிறார் என்பது குறிப்பிடதக்கதாகும்.