06th December 2022 20:00:26 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைபிரிவின் 143 வது காலாட் பிரிகேடினால் முன்முயற்சியில் தப்போவ மீனவர்களின் புத்தீனி குழந்தைகள் முன்பருவ அபிவிருத்தி நிலையத்தில் குழந்தைகளுக்கு பாடசாலை உபகரணங்கள், பரிசுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாளர் ஒருவரின் ஒத்துழைப்புடன் சனிக்கழமை (03) வழங்கப்பட்டது.
143 காலாட் பிரிகேடின் 16 வது கஜபா படையணியின் படையினர், 143 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பௌமி கிட்ச்சிலன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நன்கொடையாளர்களான திரு. திஷான் ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் விநியோக நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.
2023 ஆம் ஆண்டிற்கான புதிய பாடசாலைகளில் தரம் 1 இல் இணைய இருக்கும் 17 பிள்ளைகளுக்கும், அடுத்த வருடத்தில் பாலர் பாடசாலைகளில் சேர இருக்கும் 4 பிள்ளைகளுக்கும் பாடசாலை காலணிகள், பைகள், கிறிஸ்துமஸ் பரிசு பொதிகள் மற்றும் உயர் மதிய உணவு என்பன கலிப்ஸோ இசை நிகழ்ச்சிக்கு மத்தியில் வழங்கப்பட்டது. கிரிஸ்துடஸ் தாத்த முன்னிலையில் பிள்ளைகள் ஆடியதும் ,பாடியதும் விழாவில் மேலும் உற்சாகத்தை அளித்தது.
தப்போவ மீன்பிடிக் கிராம், மிகவும் வறுமை மக்களை கொண்ட பிரதேசமாகும்,
இந்த ஏற்பாட்டில் 16 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.