03rd December 2022 19:01:54 Hours
இராணுவப் போர்க் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டிற்கான இறுதி 'டைனர்ஸ்' கழக நிகழ்வு சனிக்கிழமை (26) அதிகாரிகள் உணவகத்தில் இலங்கை கவச வாகனப் படையணி படைத் தளபதியும் இராணுவச் செயலாளருமான மேஜர் ஜெனரல் சுவர்ண போதோட்ட அவர்கள் சிறப்பு பேச்சாளராக பங்குபற்றலுடன் நடைப்பெற்றது.
இராணுவ செயலாளர் 'அதிகாரப் பணி; சவால்கள் மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழி' என்ற தொனிப்பொருளில் தனது உரையினை மாணவர் அதிகாரிகள், தளபதி, தலைமைப் பயிற்றுவிப்பாளர் மற்றும் ஆசிரிய உறுப்பினர்கள், நிரந்தரப் பணியாளர்கள் என 171 பங்கேற்பாளர்களுக்கு விரிவுரை ஆற்றினார். மீண்டும் நியமிக்கப்பட்ட இராணுவப் போர்க் கல்லூரியின் முதல் தளபதி மற்றும் இராணுவத்தின் தொழில் மேம்பாட்டுப் பயிற்சியில் முன்னோடியாக இருந்த இராணுவச் செயலாளருடன் கலந்துரையாடும் ஒரு தனித்துவமான வாய்ப்பும் கலந்துகொண்ட அனைவருக்கும் கிடைத்தது.
இந்த நிகழ்வானது அதிகாரிகளுக்கு தொழில் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தியில் அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய அறிவை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கியது.