03rd December 2022 19:02:30 Hours
தம்புள்ளையில் உள்ள இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகம், அதன் படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்கள், இராணுவ பதவி நிலைப் பிரதானியான பதவி ஏற்பதற்கு முன்னதாக,புதன்கிழமை (30) முறைப்படி பிரியாவிடை வழங்கியது.
முகாம் வளாகத்திற்கு வருகை தந்த அவரை இயந்திரவியல் காலாட் படையணி நிலையத் தளபதி பிரிகேடியர் ஏ.எம்.ஏ.அபேசிங்க வரவேற்றார். பின்னர் முறையான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
மறைந்த போர்வீரர்களின் நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்திய அன்றைய பிரதம விருந்தினர் தொடர்ந்து, அணிவகுப்பு மைதானத்தில் அணிவகுப்பு மரியாதையை பரிசீலித்து மரியாதையினை பெற்றுக் கொண்டார். சிறிது நேரத்தின் பின்னர், அனைத்து நிலைகளுக்கும் தனது நன்றியுணர்வை வெளிப்படுத்திய மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, படையினருக்கு உரையாற்றியதுடன், தனக்கு வழங்கிய ஆதரவிற்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும் முக்கியத்துவத்தை சேர்க்கும் வகையில், முகாம் வளாகத்திற்குள் இயந்திரவியல் காலாட் படையணி படையினரால் கட்டப்பட்ட புதிய அதிகாரவணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜென்ட்கள் தங்கும் கட்டிடத்தை திறற்து வைத்தார். இராணுவ சம்பிரதாயங்களின் வழக்கமான வீதி வரிசை மரியாதை ஊடாக 13 வது படைத் தளபதி வழியனுப்பி வைக்கப்பட்டார்.