Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd December 2022 19:04:30 Hours

யாழ். பாதுகாப்பு படை தலைமையகம் ஓய்வுபெறும் தளபதிக்கு வாழ்த்து

யாழ்.பாதுகாப்பு படை தலைமையக தளபதியாக பதவி வகித்த மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்கள் 35 வருட சேவையை நிறைவு செய்து இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்காக 2022 டிசம்பர் 01 அன்று நியமனத்தை துறந்தார்.

யாழ். நகரிலிருந்து புறப்படுவதற்கு முன்னர், வெளியேறும் யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி 51, 52, 55 வது காலாட் படைப் பிரிவுகள் மற்றும் வடக்கு முன்னரங்க பராமரிப்பு பகுதிக ஆகியவற்றிற்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டார். யாழ் குடாநாட்டில் அமைதியான சூழலைப் பேணுவதற்காக தனது பதவிக்காலத்தில் பேணப்பட்ட உயர்தர நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்புமிக்க சேவைக்காக அப் பிரிவுகளில் சேவையாற்றும் அனைத்து படையினருக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

30 நவம்பர் 2022 அன்று யாழ்ப்பாணத்தில் தனது பதவிக் காலம் நிறைவடைந்ததைக் குறிக்கும் அலுவலக வளாக ஒப்படைப்பு ஆவணத்தில் கையொப்பம் இடுவதற்கு முன் இலங்கை பொறியியல் படையணி படையினரால் யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தில் தளபதிக்கு பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர், வெளியேறும் தளபதி படையினருடன் உரையாடுவதற்கு முன் குழு படம் பெறுவதற்கு அழைக்கப்பட்டதோடு அங்கு படையினருக்கு தளபதி நன்றியினையும் தெரிவித்தார்.

தளபதி அவர்களுக்கு இரவு விருந்துக்கு வழங்கப்படுவதற்கு முன், அனைத்து நிலைக்குமான தேநீர் விருந்தும் நடாத்தப்பட்டது அன்றைய நிகழ்ச்சியின் உச்சக்கட்டத்தை அடைந்தது.