03rd December 2022 19:06:04 Hours
இலங்கை இராணுவ தடகள குழு, எதிர்வரும் பாதுகாப்பு சேவைகள் தடகள போட்டி - 2023 க்கு இராணுவ வீரார்களை தயார்படுத்தும் முயற்சியில், பரிந்துரைக்கப்படக் கூடியவர்களுக்காக 'இலக்கு சாதனைகளுக்காக பாண்படுதல்' என்ற தொனிப்பொருளின் கீழ் இராணுவ விளையாட்டு வீரர்களுக்கான சாகச கள பயிற்சி நிகழ்ச்சியை அண்மையில் ஏற்பாடு செய்தது.
இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியும் இலங்கை இராணுவ தடகளக் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், திட்டமிடப்பட்ட தொடர் பயிற்சி நிகழ்ச்சிகளில் இது முதலாவதாகும்.
இந்த நிகழ்ச்சி கடந்த வியாழன் (டிசம்பர் 01) இலங்கை சிங்கப் படையணியின் தலைமையகத்தில் இலங்கை இராணுவ தடகள குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா மற்றும் கொமாண்டோ பிரிகேட் தளபதியும் இலங்கை இராணுவ தடகள குழுவின் செயலாளருமான பிரிகேடியர் விஜித ஹெட்டியாராச்சி ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இலங்கை இராணுவ தடகள குழுவின் செயலாளர் 2025 ஆம் ஆண்டு வரையிலான விளையாட்டு வீரர்களுக்கான திட்டம் உள்ளிட்ட தகவல்களுடன் தொடக்கக் கருத்துகளை விபரித்தார்., அதன்பின் இலங்கை இராணுவ தடகள குழுவின் தலைவரின் மதிப்புமிக்க உரை விளையாட்டு வீரர்களின் மன ஒருமைப்பாட்டை மேம்படுத்துதல், மன வலிமை மற்றும் தன்னம்பிக்கையை வளர்ப்பதன் மூலம் சிறந்த சாதனைகளைப் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது.
பின்னர், விஷேட பிரிகேட் பயிற்றுவிப்பாளர் மேஜர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.எம்.ரணசிங்க அவர்கள் நிகழ்ச்சித் தொடர்பான ஏனைய விரிவுரைகள் மற்றும் கள செயற்பாடுகளை நடாத்தினார்.