30th November 2022 15:56:10 Hours
24 வது படைப்பிரிவின் 241 வது காலாட் பிரிகேட் தலைமையகம் புதன்கிழமை (23) அம்பாறையில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமை அளித்து அதன் 9 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
241 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் சந்திர அபேகோன் அவர்களை இராணுவ மரபுகளுக்கு அமைவாக படையினர் அன்புடன் வரவேற்றதுடன் அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது.
பிரிகேட் தளபதி வளாகத்தில் மரக்கன்று ஒன்றினை நாட்டியதுடன் பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் குழு படம் எடுக்கவும் அழைக்கப்பட்டார். பிரிகேடியர் சந்திர அபேகோன் அவர்கள் பிரிகேடில் உள்ள அனைத்து படையினருக்கும் உரையாற்றுகையில் ஒழுக்கத்தின் உயர் தரத்தைப் பேணுவதுடன், தமது அர்ப்பணிப்புப் தன்மையினை தொடருமாறு அனைவரிடமும் கோரிக்கை விடுத்தார்.
9 வது ஆண்டு நிறைவுக்கு அமைய வளாகத்தில் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய கோப்ரல் கழகம் மற்றும் சிப்பாய்கள் உணவகம் ஆகியவற்றை பிரிகேட் தளபதி திறந்து வைத்தார். வழக்கமான அனைத்து நிலையினருக்குமான மதிய உணவுடன் ஆண்டு நிறைவு நிகழ்வு முடிந்தது.