25th November 2022 19:18:47 Hours
இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் பாரூக் புர்கி, ஹாய் (எம்) வியாழக்கிழமை (24) மன்னாரில் அமைந்துள்ள 54 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்திற்கு மரியாதை நிமித்தமான விஜயத்தை மேற்கொண்டார்.
543 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சந்திக்க ஹரஸ்கம மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு வருகை தந்த உயர் ஸ்தானிகரை 54 வது படைப்பிரிவின் தளபதியின் சார்பாக வரவேற்றனர்.
சுமுகமான உரையாடலின் போது, இரு தரப்பினரும் தற்போதைய பயிற்சி தொகுதிகள், சிவில்-இராணுவ ஒத்துழைப்பு, சமூக நல திட்டங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் அபிவிருத்தி உதவி மற்றும் நல்லிணக்க செயல்முறைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
பின்னர், பிரிகேடியர் சந்திக்க ஹரஸ்கம, மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் பாரூக் புர்க்கி, ஹாய் (எம்) அவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார். அவர் வெளியேறுவதற்கு முன், அவர் படை்பிரிவு தலைமையக அதிதிகள் புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார.