Header

Sri Lanka Army

Defender of the Nation

24th November 2022 17:55:32 Hours

532 வது காலாட் பிரிகேட் படையினரால் அனாதை மாணவருக்கு உதவி

07 நவம்பர் 2022 அன்று 'யுதுகம' தொண்டு நிறுவனத்தின் அனுசரனையில் 532 வது காலாட் பிரிகேடின் படையினரால் தெஹியத்தகண்டிய தேசிய பாடசாலையில் கல்வி கற்கும், பெற்றோர் அற்ற சிறுமிக்கு அவசியமான கல்வித் தேவைகளை நன்கு உணர்ந்து ரூபா 30,000 பெறுமதியான பாடசாலை அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ரூபா 20,000 பணம் வங்கி கணக்கில் வைப்பு செய்யப்பட்டது.

தரம் 8 ல் கல்வி பயிலும் புத்திசாலி மாணவி, பெற்றோரை இழந்த பிறகு பாட்டியின் பராமரிப்பில் வளர்கிறார். அந்தப் பாடசாலையின் ஆசிரியர்கள் அவளது வறிய நிலையை அப்பகுதியில் சேவையாற்றும் படையினரின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். 532 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுமல் விக்ரமசேகர அவர்களின் வழிகாட்டுதலிலும் ஒருங்கிணைப்பிலும் அனுசரணையாளர்களின் பிரதிநிதிகளுடன் படையினர் , மாவனகமவில் உள்ள 532 வது பிரிகேட் காலாட்படை வளாகத்தில் வைத்து நன்கொடையினை கையளித்தனர்.