24th November 2022 18:05:41 Hours
அம்பாந்தோட்டையில் உள்ள இந்திய தூதரக கிளையின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் புனிர் சுசில் அவர்கள் திங்கட்கிழமை (நவம்பர் 21) பூஸ்ஸவில் அமைந்துள்ள 61 வது காலாட் படைபிரிவுக்கு விஜயம் மேற்கொண்டார்.
படைப்பிரிவின் அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் கலந்துரையாடல் நடைபெறுவதற்கு முன்னதாக அவர், 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உதய ஹேரத் அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.
பின்னர், இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் லெப்டினன் கேணல் புனியர் சுஷிலுக்கு படைப்பிரிவின் தளபதி நினைவுப் பரிசை வழங்கினர். அவர் வெளியேறுவதற்கு முன் படைப்பிரிவு தலைமையகத்தில் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார்.