21st November 2022 22:09:12 Hours
இலங்கா ஐஓசி தனியார் நிறுவனத்தின் சிரேஷ்ட உப தலைவர் திரு டி. முகர்ஜி தலைமையிலான 20 பேர் கொண்ட தூதுக்குழு நவம்பர் 14 அன்று திருகோணமலை இராணுவ வழங்கல் பாடசாலை தளபதியை சந்தித்தது.
இராணுவ வழங்கல் பாடசாலை தளபதி பிரிகேடியர் மேனக பெர்னாண்டோ அவர்கள் பிரதிநிதிகள் குழுவை வரவேற்றதுடன் அவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலையும் மேற்கொண்டார். பிரதம பயிற்றுவிப்பாளர் கேணல் தரங்க சில்வா தொடக்க மற்றும் வரவேற்புரையாற்றினார்.
தொடர்ந்து சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் குழு 1லெப்டினன் கேணல் எம்.எஸ்.ஆர். முகமது அவர்கள் இராணுவ வழங்கல் பாடசாலையின் வகிபங்கு மற்றும் பணிகள், அதன் வரலாறு, நிறுவனத்தின் தற்போதைய மேம்பட்டு செயற்பாடுகள் மற்றும் பாடநெறிகள் பார்வையாளர்களை பற்றிய விளக்கக்காட்சியை முன்வைத்தார்.
நல்லெண்ணத்தின் அடிப்படையில் இராணுவ வழங்கல் பாடசாலை தளபதிக்கு தூதுக்குழுவினர் வழங்கிய பாராட்டுச் சின்னத்துடன் சந்திப்பு நிறைவடைந்தது. தலைமை பயிற்றுவிப்பாளர், சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் குழு 1 மற்றும் இராணுவ வழங்கல் பாடசாலை நிரந்தர பணியாளர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.