21st November 2022 22:05:52 Hours
சிரேஷ்ட தலைமைத்துவம் மற்றும் தொழில் அபிவிருத்தி பாடநெறி - 41 இன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அம்பாறை போர்ப் பயிற்சிப் பாடசாலையில் சனிக்கிழமை (19) இடம்பெற்றது.
(ஒக்டோபர் 25 முதல் நவம்பர் 19) வரை இடம் பெற்ற பாடநெறியில் இலங்கை இராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட 75 சிரேஷ்ட அதிகாரவணையற்ற அதிகாரிகளுக்கு போர்ப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் ருவான் முனிபுர அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இப் பாடநெறியின் சிறந்த மாணவராக விசேட படையணியின் பதவி நிலை சாஜன் பீஎச்எம் புஞ்சிஹேவா தெரிவு செய்யப்பட்டார்.