21st November 2022 21:57:04 Hours
சுகததாச மைதான நீச்சல் தடாகத்தில் கடந்த ஒக்டோபர் 18 - 20 ஆம் திகதிகளில் இடம் பெற்ற தேசிய நீர் போலோ சம்பியன்ஷிப் - 2022 போட்டியில் இலங்கை இராணுவத்தின் ஆண்கள் அணி மூன்றாமிடத்தைப் பெற்றுக்கொண்டது. இந்தப் போட்டியில் நாடளாவிய ரீதியில் பத்து விளையாட்டுக் கழகங்கள் போட்டியிட்டன.
இலங்கை இராணுவ நீர் விளையாட்டுக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அந்த வீரர்களின் முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கண்காணித்து அவர்களை ஊக்குவித்தார்.
இலங்கை நீர் விளையாட்டு ஒன்றியத்தால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.