Header

Sri Lanka Army

Defender of the Nation

19th November 2022 20:53:05 Hours

படையினரால் குழந்தைகளுடன் வாழும் விதவைப்பெண்ணுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 223 வது பிரிகேடின் 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையினரால் சனிக்கிழமை (12) மேற்கொள்ளப்பட்ட முயற்சியினால் மொல்லிப்பொத்தானை, தபலகமுவ பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளுடன் வசிக்கும் விதவைக்கு ரூபா 25,000/= மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதி வழங்கப்பட்டது.

15 வது இலங்கை இலேசாயுத காலட் படைப்பிரிவின் வேண்டுகோளிற்கமைய கொழும்பை வசிப்பிடமாக கொண்ட அனுசரனையாளரான திருமதி திலினி விதானகே அவர்களுக்கு இப் பெண்ணின் வாழ்கை நிலைமை அறியப்படுத்தியதினையடுத்து இந் செயலுக்கான நிதியுதவி வழங்கப்பட்டது.

நன்கொடையாளர் சார்பாக 15 வது இலங்கை இலேசாயுத காலட்படை படைப்பிரிவின் இரண்டாம் கட்டளை அதிகாரி சில படையினருடன் பயனாளியின் வீட்டு வாசலுக்குச் சென்று குறித்த அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.