19th November 2022 21:10:44 Hours
தம்புள்ளை 53 வது காலாட் படைபிரிவு தலைமையகம் வியாழக்கிழமை (10) இராணுவ சம்பிரதாயங்கள் மற்றும் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் புதிய தளபதி மேஜர் ஜெனரல் ஷானக ரத்நாயக்க அவர்களை வரவேற்றது.
இராணுவ சம்பிரதாயங்களுக்கு ஏற்ப 6 வது இலேசாயுத காலாட்படை படையினர் புதிதாக நியமிக்கப்பட்ட தளபதிக்கு பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதையினை வழங்கி கௌரவித்தனர்.
பின்னர் தளபதி மகா சங்கத்தினரின் சமய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
தொடர்ந்து அந்நாளின் நினைவாக முகாம் வளாகத்தில் மரக்கன்றினை நடுவதற்கும் படையினருக்கு சம்பிரதாய உரையினை நிகழ்துவதற்கும் புதிய தளபதி அழைக்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் பிரிகேட் தளபதிகள், பணிநிலை அதிகாரிகள் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.