19th November 2022 13:22:12 Hours
மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் புதிய தளபதியாக கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க அவர்கள் வியாழன் (17) அன்று தியத்தலாவ பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது பதவியேற்றார்.
இராணுவ முறைப்படி தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை தொடர்ந்து அணிவகுப்பு மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தொடர்ந்து மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க அவர்கள் தனது புதிய அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டதுடன் அங்கு அவர் தனது புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். இந்நாளினை அடையாளப்படுத்தும் முகமாக முகாம் வளாகத்தில் மரக்கன்று நடுவதற்கும் புதிய தளபதி அழைக்கப்பட்டார்.
மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க அவர்கள் தனது பணி மற்றும் கடமைகளை நிர்ணயித்து, படையினருக்கு உரையாற்றியதுடன் நாட்டின் செழிப்புக்காகவும் இராணுவத்தினை மேம்படுத்துவதற்கும் ஒரு குழுவாக பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை விளக்கினார்.
11 மற்றும் 12 வது காலாட் படைப்பிரிவுகளின் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட பணிநிலை அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.