19th November 2022 13:00:12 Hours
கொழும்பில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தூதுக்குழுவின் தலைவர் திருமதி செவரீன் சப்பாஸ் மற்றும் கொழும்பு உதவி அதிகாரி தூதுக்குழு கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி அவர்களை புதன்கிழமை (16) வெலிகந்தவில் உள்ள கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தனர்.
மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பதற்காக இலங்கை இராணுவத்திற்கும் இலங்கை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் இடையில் நிலவும் நெருக்கமான ஒத்துழைப்பு தொடர்பில் பரஸ்பர நலன்கள் பற்றிய கருத்துக்கள் இந்த சந்திப்பில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
சுமூகமான கலந்துரையாடலின் முடிவில் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி இலங்கை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு நினைவு சின்னங்களை வழங்கி நல்லெண்ணத்தை அடையாளப்படுத்தினார். கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திலிருந்து இருந்து வெளியேறும் முன் திருமதி. செவரின் சப்பாஸ் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார்.
இந்த நிகழ்வில் உயர் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.