19th November 2022 20:48:16 Hours
12 வது படைப்பிரிவின் இராணுவப் புலனாய்வுப் படையினர் வழங்கிய தகவலையடுத்து, மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் படையினரால் ஹம்பேகமுவ பொலிஸாருடன் இணைந்து 4 முதல் 5 அடி உயரம் கொண்ட பாரிய கஞ்சா பயிர்ச் செய்கையை வியாழன் (17) ஊவா-குடாஓயா பலஹருவ பகுதியில் முற்றுகையிடப்பட்டு அழிக்கப்பட்டது.
படையினர் முற்றுகையிடுகையில் இந்த சட்டவிரோத பயிர்செய்கையில் சுமார் 20,000 கஞ்சா மரக்கன்றுகள் இருந்தன. அவை ரகசியமாக வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு கொண்டிருந்தன.
12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மிஹிந்து பெரேரா அவர்களின் வழிக்காட்டலின் கீழ் போதைப்பொருள் தடுப்புக்கான தேசிய நடவடிக்கைக்கு ஏற்ப ஹம்பேகமுவ பொலிஸாருடன் இணைந்து 121 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜானக உடோவிடவின் மேற்பார்வையின் கீழ் இப் பணி முன்னெடுக்கப்பட்டது.