Header

Sri Lanka Army

Defender of the Nation

19th November 2022 21:20:57 Hours

2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையினரின் முதல் நெல் அறுவடை

அரசாங்கத்தின் 'பசுமை விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு' செயற்றிட்டத்திற்கு இராணுவத் தளபதி பங்களிக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட விவசாய திட்டத்தின் முயற்சியாக 2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் கிரித்தலையில் கைவிடப்பட்ட சதுப்பு நிலத்தில் நெல் விதைகளை விதைத்தனர். அதன் முதல் நெல் அறுவடையை வெள்ளிக்கிழமை (11) மேற்கொண்டனர்.

2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையினர் கிழக்கு முன்னரங்க பராமரிப்பு பகுதியின் தளபதி மேஜர் ஜெனரல் சானக மெத்தானந்தா அவர்களின் அறிவுறுத்தலின் தேசிய உணவு பங்களிப்பிற்காக கீழ்கிரித்தலை பிரதேசத்தில் 3 ஏக்கர் நிலத்தை உழுது தயார் செய்து ஆகஸ்ட் மாதம் விதை நெல் விதைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி கட்டளை அதிகாரியான மேஜர் என்.பி.இ.என் நெரங்கம தலைமையில் நடைபெற்ற அறுவடை வைபவத்தில் இந்தத் திட்டத்திற்காக படையினரை உன்னிப்பாகக் கண்காணித்து வழிநடத்திய இராணுவப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் முதல் அறுவடை மேற்கொள்ளப்பட்டது.