17th November 2022 18:50:39 Hours
மேற்கு, வடமேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்கள் உட்பட ஒன்பது மாவட்டங்களுக்கு பாதுகாப்பு மற்றும் அனைத்து அவசர சேவைகளை வழங்கும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் தனது 10வது ஆண்டு நிறைவை செவ்வாய்க்கிழமை (15) பனாகொடை மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் கொண்டாடியது.
ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு (15), மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினரால் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்களுக்கு இராணுவ பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இலங்கை இராணுவப் பொறியியல் படையணியினரால் இராணுவ மரியாதைகள் வழங்கப்பட்டதுடன் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 13 வது தளபதியை மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல் பிரிகேடியர் அசேல அமரசேகர, பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன ஆகியோரால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் மரக்கன்றும் நடப்பட்டதை தொடர்ந்து படையினருக்கு ஆற்றிய உரையில், இராணுவக் கடமைகளைச் செய்யும்போது ஒழுக்கம் மற்றும் தார்மீக நடத்தையைப் பேணுவதன் முக்கியத்துவத்தை மேற்குத் தளபதி எடுத்துரைத்தார். அன்றைய தினத்தின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில், அனைத்துத் படையினருடனும் குழு புகைப்படத்திலும் இணைந்து கொண்டார்.
மதிய உணவு விருந்துடன் அன்றைய நிகழ்வு முடிவுக்கு வந்தது. இந்நிகழ்வில் 61 மற்றும் 14 வது காலாட் படைப்பிரிவுகளின் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.