Header

Sri Lanka Army

Defender of the Nation

17th November 2022 18:45:36 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக புதிய தளபதி பதவியேற்றல்

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக புதிய தளபதியாக இலங்கை இலேசாயுத காலாட்படை படையணி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி அவர்கள் திங்கட்கிழமை (14) வெலிகந்தவில் அமைந்துள்ள கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது பதவியேற்றார்.

சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து பௌத்த மத வழிபாடுகளில் கலந்து கொள்வதற்கு முன், இராணுவ முறைப்படி வளாகத்திற்கு வந்தடைந்தவுடன் அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

அவரது புதிய நியமனத்திற்கு ஆசீர்வாதங்களைத் தெரிவித்து மகா சங்க உறுப்பினர்கள் ‘செத்பிரித்’ பாராயணங்களை ஆரம்பித்தபோது, மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி அவர்கள் தனது புதிய பதவியை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். இந்நாளின் முக்கியத்துவத்தினை நினைவுகூறும் முகமாக முகாம் வளாகத்தில் மரக்கன்று நடுவதற்கும் புதிய தளபதி அழைக்கப்பட்டார்.

மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி அவர்கள் தனது பணி மற்றும் கடமைகளை நிர்ணயித்து, சம்பிரதாயமாக படையினருடன் உரையாடியதுடன் அதன் போது நாட்டின் செழிப்புக்காகவும் இராணுவத்தின் நிலைமையினை மேம்படுத்துவதற்கும் ஒரு குழுவாக பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.

22, 23 மற்றும் 24 வது காலாட் படைப்பிரிவுகளின் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட பணிநிலை அதிகாரிகள், கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.