Header

Sri Lanka Army

Defender of the Nation

16th November 2022 16:46:25 Hours

9 வது இலங்கை சிங்க படையினரால் பரந்தனில் மற்றொரு வறிய குடும்பத்திற்கு நிரந்தர நிவாரணம்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 57 வது படைப்பிரிவின் 571 ஆவது பிரிகேடின் 9 ஆவது இலங்கை சிங்கப் படையணி படையினர் மற்றொரு வறிய குடும்பத்திற்கு ஓய்வுபெற்ற இராணுவ சிரேஷ்ட அதிகாரியினால் கிடைக்கப்பெற்ற நிதியில் கொரக்கன்கட்டு, பரந்தன் பிரதேசத்தில் புதிய வீட்டை நிர்மாணித்ததன் மூலம், உள்ளூர் பொதுமக்களின் நலன்களுக்காக இராணுவத்தின் அர்ப்பணிப்பு மீண்டும் ஒருமுறை முல்லைத்தீவில் நிரூபிக்கப்பட்டது.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேலும் ஒரு சமூகம் சார்ந்த பொறுப்பாக இந்த வீடமைப்புத் திட்டம் 57 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்திமால் பீரிஸ் அவர்களின் மேற்பார்வையில் ஆரம்பிக்கப்பட்டது.

571 காலாட் படை பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த கம்லத்தின் ஒருங்கிணைப்பில் அமெரிக்காவில் வசிக்கும் மேஜர் ஜெனரல் ரவி ரத்னசிங்கம் (ஓய்வு) மற்றும் அவரது நண்பர்கள் மூலம் 1.7 மில்லியன் ரூபாவை புதிய வீட்டை நிர்மாணிப்பதற்காக நன்கொடையாக வழங்கப்பட்டது. பிள்ளைகளுடன் குடிசையில் வாழும் ஆதரவற்ற திரு முனியாண்டி பார்த்திபன் குடும்பத்திற்கு இவ்வீடு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குடும்பத்தின் பரிதாபகரமான வாழ்க்கை நிலைமையை அந்தந்த அரச அதிகாரிகளால் இராணுவத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் 9 வது சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஆர்.வி திஸாநாயக்க அவர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மிகவும் அர்ப்பணிப்பு மனித சக்தியை பயன்படுத்தி குறுகிய காலத்தில வீடு நிர்மாணக்கப்பட்டது.

வியாழன் அன்று (10 நவம்பர் 2022), முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்கள் புதிய வீடு திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நாடா வெட்டி மற்றும் பதாகை திரைநீக்கம் செய்து அவர்களின் புதிய வீட்டின் சாவியை குடும்பத்தினரிடம் கையளித்தார்.

அரச அதிகாரிகள், 57 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்திமால் பீரிஸ், , 571, 572 மற்றும் 573 வது காலாட் பிரிகேட் தளபதிகள், 9 வது இலங்கை சிங்கப் படையணி கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் வீட்டின் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.