Header

Sri Lanka Army

Defender of the Nation

15th November 2022 15:15:14 Hours

படையினரின் உதவியுடன் புகையிரதப்பாதை சீரமைப்பு

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர் ஞாயிற்றுக்கிழமை (13) மாலை துரிதமாகப் செயற்பட்டு அடை மழை காரணமாக ஹப்புத்தளை மற்றும் இதல்கஸ்ஹின்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக தடைசெய்யப்பட்டிருந்த புகையிரத பாதையினை சீரமைப்பு செய்தனர்.

தண்டவாளத்தை பாதித்த கற்பாறைகள், பாறைகள் மற்றும் மண் மேடுகளை படையினர் அகற்றி சில மணி நேரங்களில் இயல்பு நிலைக்கு புகையிரத பாதையினை சீரமைத்தனர்.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் குமார வனசிங்க அவர்கள் படையினரின் பங்களிப்பை உன்னிப்பாகக் கண்காணித்தார்.