16th November 2022 13:45:25 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கல்ப சஞ்சீவ அவர்கள் தம்புள்ளை கீரகொல்ல பிரதேசத்தில் அண்மையில் மீண்டும் நிறுவப்பட்ட 4 வது இலங்கை இலேசாயுத காலாட்படை படையணி முகாமுக்கு 11 வது காலாட் படைபிரிவு மற்றும் 111 வது காலாட் பிரிகேட் பணி நிலை அதிகாரிகளுடன் அதன் நிர்வாக விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு கள விஜயமொன்றை மேற்கொண்டார்.
முதலில், தளபதி அவர்கள் போவதென்ன மற்றும் மொரகஹகந்தவில் உள்ள 4 இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரை சந்தித்தார். அதனை தொடர்ந்து படைத் தளபதி கீரகொல்லவில் அமைந்துள்ள 4 வது இலேசாயுத காலாட்படை படையணியில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
4 வது இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டபிள்யூ.வி.பி.பி.ஆர் வீரபுரவுடன் தொடர்ந்து நடந்த கலந்துரையாடல் மூலம் முகாம் மற்றும் படையினரின் பல்வேறு நிர்வாக மற்றும் வழங்கல் தேவைகள் குறித்து அறியப்பட்டது. தளபதி அவர்கள் தனது வருகையின் நினைவாக மரக்கன்று ஒன்றினை நடுவதற்கு முன்னர் முகாம் வளகத்தினை மேற்பார்வை செய்தார்.
முகாம் வளாகத்தினை விட்டு தளபதி அவர்கள் விடைப்பெற்று செல்லும் முன்னர் அனைத்து அதிகாரிகள் மற்றும் படையினருடன் குழு புகைப்படத்தினை பெற்றுக்கொண்டார்.