Header

Sri Lanka Army

Defender of the Nation

15th November 2022 14:30:14 Hours

எல்ஆர்பி பாடநெறி – 22 நிறைவு செய்தவர்களுக்கு சின்னங்கள் அணிவிப்பு

வவுனியா, பிறப்பைமடு 3 வது விஷேட படையணி வன அப்பியாச பயிற்சி தளத்தில் ஒன்பது மாத கால 'நீண்ட தூர ரோந்து' பாடநெறி எண் - 22 ஐ வெற்றிகரமாக முடித்த சிறப்புப் படை படையணியின் மூன்று அதிகாரிகளும் முப்பது சிப்பாய்களும் தங்களின் திறமைக்கான சின்னங்களை திங்கட்கிழமை (14) நாவுல விஷேட படையணி தலைமையகத்தில் பெற்றனர்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை விஷேட படையணி தளபதியும் மற்றும் இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதியுமான மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்கள் கலந்து கொண்டார்.

விஷேட படையணி தலைமையக நிலைய தளபதி (பதில்) கேணல் கனிஷ்க கனேகொட 3 வது விஷேட படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எஸ்எம்என்கேபீ செனவிரத்ன ஆகியோர் முகாமின் நுழைவாயிலில் அன்றைய பிரதம அதிதியை வரவேற்றனர்.

தொடர்ந்து அன்றைய தின பிரதம அதிதி 58 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் விபுல இஹலகே, 57 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்திமால் பீரிஸ், 64 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க எரியகம மற்றும் 59 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ரணசிங்க, அவர்களுடன் இணைந்து அனைத்து பட்டதாரிகளுக்கும் எல்ஆர்பி சின்னத்தினை சூட்டினார். எல்ஆர்பி பாடநெறி எண் - 22 இல் சாதனை படைத்தவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்ட பின்னர், அன்றைய பிரதம விருந்தினர் உரையாற்றினார்.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.