15th November 2022 15:00:14 Hours
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தினர் மேலும் ஒரு சிவில்-சார்ந்த சேவையை வழங்கும் நிமித்தம் சனிக்கிழமை (12) யாழ். பலாலி விமான நிலையத்திற்கு வருகை தந்த 40 பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு தங்களின் உதவியை வழங்கினர்.
புத்தூரில் உள்ள யாழ்/மதிஹே பண்ணசீஹ் வித்யாலயத்தின் பாடசாலை மாணவர்களும் 39 பெற்றோர்களும் விமான நிலையத்தில் தங்கியிருந்த காலத்தில் விமான நிலையம் மற்றும் விமானங்களின் நகர்வுகளை பார்வையிட்டனர். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களின் பணிப்புரையின் பேரில், இவ் விஜயத்தை மேற்கொண்ட மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.