15th November 2022 15:10:14 Hours
மேஜர் ஜெனரல் உதய ஹேரத் அவர்கள் நவம்பர் 14 ஆம் திகதி பூஸ்ஸ படைப்பிரிவு தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் 17 வது தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
புதிய தளபதி தலைமையக வளாகத்தை வந்தடைந்தபோது 14 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, புதிதாக நியமிக்கப்பட்ட தளபதி புத்த துறவிகளின் 'செத் பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில், புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில், உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு பதவியேற்றார்.
சம்பிரதாயங்களுக்கு ஏற்ப, புதிய தளபதி மரக்கன்று ஒன்றை நட்டதுடன் தனது முன்னோக்கு பார்வையினை படையினரிடம் கூறினார். அன்றைய நிகழ்வில் 611 வது மற்றும் 612 வது பிரிகேட் தளபதிகள், பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.
அவர் இப்போது மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க அவர்களுக்கு பின் பதவியேற்றுள்ளார்.