14th November 2022 19:45:05 Hours
பிரித்தானிய பாதுகாப்பு கல்லூரியின் தளபதியும் பிரதம நிறைவேற்று அதிகாரியமான மேஜர் ஜெனரல் ஏஎம் ரோ சிபி அவர்கள் தனது தூது குழுவினருடன் சப்புகந்தை பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரிக்கு விஜயத்தை மேற் கொண்டதுடன் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ அவர்களை கடந்த புதன்கிழமை (2) சந்தித்தார்.
அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல்கள் இடம் பெற்றதுடன் பாதுகாப்புக் கல்வி மற்றும் தொழில்சார் கருத்துக்கள் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதற்கான தொகுதிகள் சேகரிப்பு, இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்தால் 2023 (பிப்ரவரி 13 - 16) வரையிலான தெற்காசியக் கட்டளைத் தளபதிகளின் மாநாட்டை இணைந்து நடத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடினர். அதற்கமைய விளக்கப்படுத்தல் இடம் பெற்றதை தொடர்ந்து, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி வளாகத்தில் களப் விஜயத்தையும் மேற்கொண்டனர்.
அதன் பின்னர் இந்சந்திப்பு நிகழ்வை குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறி கொள்ளப்பட்டதுடன் நிகழ்வு முடிவடைந்தது. மேஜர் ஜெனரல் ஏ.எம் ரோ சிபி அவர்கள் அதிதிகள் கருத்து பதிவு புத்தகத்தில் தனது எண்ணங்களையும் பதிவிட்டார்.
பிரித்தானிய பாதுகாப்பு கல்லூரி ஆனது பிரிதானிய ஆயுதப் படைகள், சிவில் சேவை, ஏனைய அரச துறைகள் மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த சேவை நபர்களுக்கு உயர் கல்வி வழங்கும் நிறுவனம் என்பது குறிப்பிடதக்கதாகும்.