14th November 2022 19:15:05 Hours
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 55 வது காலாட்படை படைப்பிரிவின் 553 வது காலாட்படை பிரிகேடின் 10 வது விஜயபாகு காலாட் படையணியினர் மருதங்கேணி வள்ளுவர் பாலர் பாடசாலை பிள்ளைகளுக்கு இராணுவத்தின் தேவையுடையோருக்கு உதவிக்கரம் வழங்கும் திட்டத்திற்கு அமைய பாலர் பாடசாலை உபகரணங்கள் அடங்கிய 30 பொதிகள் புதன்கிழமை (9) விநியோகிக்கப்பட்டன.
நிகழ்வு 553 வது காலாட் பிரிகேட்டின் தளபதி பிரிகேடியர் ரொஹான் ஜயக்கொடி அவர்களின் பணிப்புரைக்கமைய 553 வது காலாட் பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் ஏ.ஏ.பி.எஸ் வணிகசேகர அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. 10 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரி மேஜர் கே.எச்.சி.சமன்பிரிய இத்திட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்தார்.
553 வது காலாட் பிரிகேடின் தாராள மனப்பான்மை கொண்ட படைவீரர்கள் தானாக முன்வந்து இத்திட்டத்திற்கு தங்கள் சொந்த பணத்தை வழங்கி அனுசரணை வழங்கினர்.
இந்த நிகழ்வில் 553 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரொஹான் ஜயக்கொடி அவர்கள் மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.