14th November 2022 19:30:05 Hours
மன்னார் 54 வது படைப்பிரிவின் இராணுவப் புலனாய்வுப் படையினர் மற்றும் 11 வது இலங்கை பீரங்கி படையணி படையினர் இன்று காலை (14) மன்னார் வீதித் தடையில் 25 கிராம் ‘ஐஸ்’ (கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன்) போதைபொருளினை கண்டுபிடித்தனர்.
திடீர் வீதித் தடை சோதனையின் போது, சந்தேக நபர் ஒருவரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த ‘ஐஸ்’ போதைப்பொருள் பொதி தலைமன்னாரிலிருந்து மடு நோக்கிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் இருந்து காலை 8.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் மற்றும் சந்தேக நபரை இராணுவத்தினர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.