13th November 2022 18:48:46 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் மேற்குத் தளபதி ஆகியோரின் அறிவுறுத்தல்களின் பேரில், கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட முறையீட்டிற்கு, அமைவாக மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சனிக்கிழமை (12) நவகமுவ, மாபிடிகம களனி 'பொடி பாலம' ஆற்று நீர் ஓட்டத்தை பாதித்த கொங்கிரீட் தூண்களைச் சுற்றியிருந்த மூங்கில் மரங்களின் அடைப்பை அகற்றும் பணியை முன்னெடுத்தனர்.
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவின் 144 வது பிரிகேடின் 24 வது இலங்கை சிங்கப் படையணி மற்றும் 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிப்பாய்களுடன் நவகமுவ பொலிஸாரின் ஆதரவுடன் சில மணிநேரங்களில் தடைகளை அகற்றினர்.
மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்கள் 14 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரொஹான் ஜயமன்ன மற்றும் 144 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் விந்தன கொடித்துவக்கு ஆகியோரை அவசரகாலச் சூழ்நிலையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.