10th November 2022 20:30:00 Hours
இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி ஆலோசகரும் (நிர்வாகம்) தூதருமான திருமதி அன்டெரி ரோசன் மற்றும் தூதுக்குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை (9) முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு மரியாதை நிமித்தம் விஜயத்தை மேற்கொண்டனர்.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்கள் வருகை தந்த தூது குழுவினருடன் சிவில்-இராணுவ ஒத்துழைப்பு, சமூக நலத்திட்டங்கள், பாதுகாப்பு தொடர்பான அபிவிருத்தி உதவிகள் மற்றும் நல்லிணக்க செயல்முறைகள் தொடர்பாக கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்.
சந்திப்பின் இறுதியில் நிகழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன. இக்கலந்துரையாடலின் போது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேணல் பொதுப்பணி கேணல் லலித் வீரகோன் அவர்களும் உடனிருந்தார்.
முன்னதாக இக் குழுவினர் திங்கட்கிழமை (07) யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர் என்பது குறிப்பிடதக்கதாகும்.