10th November 2022 20:37:53 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கொழும்பில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தூதுக்குழுவின் தலைவர் திருமதி செவரின் சப்பாஸ், இலங்கை மற்றும் பங்களாதேஷின் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆயுதப் படைப் பிரதிநிதி திரு. அல்பர்ட் ஸ்கோன்வெல்ட் (Albert Schoneveld) மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளின் திட்ட அதிகாரி திரு.சன்ன ஜெயவர்தன ஆகியோரைச் நேற்று (9) பிற்பகல் இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பானது பரஸ்பர நலன்கள் குறித்த எண்ணங்களை பரிமாறிக் கொள்வதற்காக திட்டமிடப்பட்டது. இலங்கை இராணுவம் ஆனது மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பிற்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு நெருக்கமான ஒத்துழைப்பு வழங்குகின்றது.
இச் சந்திப்பின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு நல்லெண்ணத்தை அடையாளப்படுத்தும் வகையில் நினைவுச் சின்னங்களை பரிமாரிக் கொண்டனர்.