Header

Sri Lanka Army

Defender of the Nation

10th November 2022 20:57:00 Hours

நன்கொடையாளர்களின் உதவியுடன் மத்திய படையினரால் உலர் உணவு பொதிகள் விநியோகம்

கஹகொல்ல தேயிலைத் தோட்டக் கம்பனியை அண்மித்த பிரதேசத்தில் வசிக்கும் 75 ஏழைக் குடும்பங்களுக்கு, கொழும்பில் உள்ள நன்கொடையாளரின் அனுசரணையுடன் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினரால் சனிக்கிழமை (5) உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, நன்கொடையாளர் திரு கிருஷ்ண கோபி, அவர்களின் நிதியுதவி நிவாரணத் திட்டத்தின் கீழ் தலா ரூ. 7500.00 பெறமதியான உலர் உணவுப் பொதிகள் அப்பிரதேசத்தில் மிகவும் வறுமையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் நன்கொடையாளர் திரு. கிருஷ்ண கோபியும் கலந்துக் கொண்டு உணவுப் பொதிகளை விநியோகித்தார்.