07th November 2022 21:30:16 Hours
இலுப்பைக்குளம், கொண்டச்சி, விக்கும்புர மற்றும் பூமலந்தம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் 120 ஆதரவற்ற குடும்பங்களுக்கு வெள்ளிக்கிழமை (4) மடு ஸ்ரீ போதிராஜாராம விகாரைக்கு அழைக்கப்பட்டு 542 வது பிரிகேட் படையினரால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
54 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 542 பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஷிஹான் பெர்னாண்டோ அவர்களின் கண்காணிப்பின் கீழ் 8 வது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 15 (தொ) கெமுனு ஹேவா படையணி படையினரின் ஆதரவுடன் இந் நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.
இந் நன்கொடையில் ஒவ்வொரு பயனாளிக்கும் தலா ரூபா 10,000/= பெறுமதியான உலர் உணவுப் பொதி வழங்கப்பட்டது. அந்த உலர் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நிதிப் பங்களிப்பை கொழும்பு – எம்எஸ்சீ லங்கா தனியார் நிறுவனம் வழங்கியது.
542 வது பிரிகேட் தளபதி, 8 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள், பொது முகாமையாளர் திரு.பிரிமல் பீரிஸ், தலைமை நிதி அதிகாரி திரு.கெலும் வர்ணகுலசூரிய, கொழும்பு எம்எஸ்சீ லங்கா தனியார் நிறுவனத்தின் மனித வள முகாமையாளர் திரு.தினிஷ் விக்கிரமசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.