08th November 2022 22:27:38 Hours
கட்டுகெலியாவயில் அமைந்துள்ள படையணி பயிற்சிப் பாடசாலையில் முதலாவது இலங்கை இராணுவ முன்னோடிப் படையணி படையினருக்கான பயிற்சியின் நிறைவு நிகழ்வை முன்னிட்டு மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்கள் வெள்ளிக்கிழமை (4) பயிற்சி பாடசாலைக்கு விஜயம் செய்தார்.
61 வது படைப்பிரிவின் தளபதி மற்றும் 612 பிரிகேட் தளபதி ஆகியோர் பாடசாலையின் பிரதம பயிற்றுவிப்பாளருடன் இணைந்து மேற்குத் தளபதியை பாடசாலை வளாகத்திற்கு அன்புடன் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, பயிற்சிப் பாடசாலையின் தலைமைப் பயிற்றுவிப்பாளர், பாடசாலையின் பயிற்றுவிப்பாளர்களை, வருகை தந்த தளபதிக்கு அறிமுகப்படுத்தினார்.
அதன்பின், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி அவர்கள் முகாம் சுற்றுப்புறம், பயிற்றுனர்கள் மற்றும் மாணவர்களின் நலன் மற்றும் பாடசாலையின் பல முக்கிய இடங்களை ஆய்வு செய்தார். அத்தோடு எதிர்காலத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.
சில நிமிடங்களுக்குப் பின்னர், தலைமை பயிற்றுவிப்பாளரால் நடத்தப்பட்ட படையணி பயிற்சிப் பாடசாலையின் பங்கு மற்றும் பணிகள் தொடர்பான விரிவான விளக்கத்தில் மேற்குத் தளபதி மற்றும் ஏனைய பங்கேற்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, பயிற்றுவிப்பாளர்களிடம் உரையாற்றிய மேற்குத் தளபதி, பயிற்றுவிக்கும் முறை, பயிற்றுவிப்பாளரின் குணங்கள் மற்றும் தொடர்ச்சியான பயிற்சியை மேம்படுத்துவதன் அவசியத்தையும் நாட்டின் எதிர்கால பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பணிகள் தொடர்பான பல முக்கிய காரணிகள் தொடர்பாக வலியுறுத்தினார். பின்னர் கட்டுகெலியாவ படையணி பயிற்சிப் பாடசாலையின் பயிற்றுவிப்பாளர் குழுவின் சார்பில் மேற்குத் தளபதிக்கு பிரதம பயிற்றுவிப்பாளரினால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
விரிவுரை மண்டபத்தில் முதலாவது இலங்கை இராணுவ முன்னோடிப் படையணியில் பயிற்சி பெற்ற உறுப்பினர்களின் இறுதி விளக்கக்காட்சியில் கலந்துகொள்வதற்கு முன்னர், முதலாவது இலங்கை இராணுவ முன்னோடிப் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களால் மேற் கொள்ளப்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பான ஆர்ப்பாட்டதுடன், ஒரு சுருக்கமான விரிவுரையும் இடம் பெற்றது.
இந்த விஜயத்தின் போது மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுபணி, பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன, கேணல் பொது பணி மற்றும் பல அதிகாரிகளும் மேற்கு தளபதியுடன் விஜயத்தை மேற் கொண்டனர்.