08th November 2022 22:30:04 Hours
நவம்பர் 1 தொடக்கம் 6 ம் திகதி வரையான காலப்பகுதியில் வெலிகந்த கடவத்மடுவ புராதன விகாரையில் வருடாந்த “கட்டினசீவர பிங்கம” நிகழ்வானது கிழக்கு பாதுகாப்பு படைத் தலமையக படையினரின் பங்களிப்புடன் மகா சங்க உறுப்பினர்களின் உதவியுடன் இடம்பெற்றது.
இத் திட்டமானது கிழக்குப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் பணிப்புரையின் பேரில் ‘போதி பூஜை’, கட்டின பெரஹெர மற்றும் ஏனைய ஏற்பாடுகளுக்கு படையினர் ஆதரவு வழங்கினர். அதற்கமைவாக வண. இதன்பிட்டியே வஜிரலங்கார தேரர் அவர்களால் படையினருக்கு ஆசீர்வாதங்களை வழங்கியதுடன் அவர்களின் ஒத்துழைப்பிற்கு தனது பாராட்டுக்ளையும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் கலந்துக்கொண்ட தேரர்கள் மற்றும் பக்தர்களுக்கு தானம் மற்றும் உணவு விநியோகம் செய்வதற்கும் படையினர் உதவினார்கள்.