08th November 2022 22:32:36 Hours
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி ஆலோசகர் (முகாமை) மற்றும் தூதுவர் திருமதி ஆண்டேரி ரோசன் மற்றும் தூதுக்குழுவினர் நேற்று திங்கட்கிழமை (07) யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டனர்.
இவ் அலுவலகத்திற்கு வருகை தந்த தூதுக்குழுவினரை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்கள் அன்புடன் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து இவர்களுக்கிடையில் யாழ் சிவில் இராணுவ ஒத்துழைப்பு, சமூக நலத்திட்டங்கள், பாதுகாப்பு அக்கறைகள், அபிவிருத்தி உதவிகள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் பல கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டன.
இச்சந்திப்பின் முடிவில், நிகழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன. இக்கலந்துரையாடலின் போது யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப் பணி மற்றும் கேணல் பொதுப் பணி ஆகியோரும் கலந்து கொண்டனர்.