Header

Sri Lanka Army

Defender of the Nation

04th November 2022 16:19:56 Hours

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு 19 வருட ஆண்டு பூர்த்தி

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2022 ஒக்டோபர் 27-30 ஆம் திகதிகளில் மதச் சடங்குகளின் பிரகாரம் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகம் அதன் 19 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.

ஒக்டோபர் 27 அன்று சோமாவதிய ராஜா மகா விகாரையில் சிறப்பு போதி பூஜை 'பிங்கம' மற்றும் பால் உணவு (கிரி ஆஹார) வழங்கும் நிகழ்வுகள் இடம் பெற்றதுடன், கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் மற்றும் சிவில் ஊழியர்களுக்கான ஆசீர்வாதங்கள் நிகழ்வும் இடம் பெற்றது. அதனை தொடர்ந்து, மறுநாள் காலை பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆண்டு பூர்த்தி நாளில் (30), கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் உள்ள அனைத்து படையினரும் மதிய உணவு விருந்துபசாரத்தில் ஒன்றாக கலந்துகொண்டனர்.

அதன் பின்னர், கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக பிரிகேடியர் பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் சுஜீவ ஜயசிங்க அவர்களின் பங்களிப்புடன் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் சிவில் ஊழியர்களுக்கு 50 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக பணிபுரியும் படையினர் மற்றும் சிவில் ஊழியர்களுக்காக மாலையில் இசை நிகழ்ச்சியுடன் ஆண்டு நிறைவு பூர்த்தி விழா நிறைவடைந்தது.