Header

Sri Lanka Army

Defender of the Nation

06th November 2022 15:00:43 Hours

மேலும் 'ஐஸ்' போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர் கைது

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்குட்பட்ட 23 வது படைப்பிரிவின் 233 வது பிரிகேடின் 3 வது (தொண்டர்) இராணுவப் புலனாய்வுப் படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில், அப்படையினர் கதிரவெளி விசேட பொலிஸ் அதிரடிப்படை அதிகாரிகளுடன் இணைந்து 15.6 கிராம் “மெத்தம்பெட்டமைன்” (ஐஸ்) (ரூ. 270,000/=) பெறுமதியான போதைப் பொருளுடன் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபர் வியாழக்கிழமை (03) நாவலடி பிரதேசத்தில் இருந்த போது 34,500/= ரொக்க பணம், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் அவரிடம் இருந்து படையினர் கைப்பற்றியுள்ளனர்.

போதைப்பொருள், பணம் மற்றும் உபகரணங்களுடன் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, 23 வது படைப் பிரிவின் தளபதி மற்றும் 233 வது பிரிகேட் தளபதி ஆகியோர் இணைந்து மேற்படி சோதனையை உன்னிப்பாகக் கண்காணித்தனர்.