03rd November 2022 18:57:46 Hours
222 வது பிரிகேட் படையினர் கந்தளாய் பிரதேசத்தில் பொலிஸாருடன் இணைந்து, கந்தளாய் பிரதேசத்தில் திங்கட்கிழமை (31) புதையல் தோண்டுதலில் ஈடுபட்ட 3 சந்தேக நபர்களை இரண்டு மண்வெட்டி மற்றும் ஒரு நீர் இறைக்கும் மோட்டருடன் கைது செய்துள்ளனர்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய புதையல் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை பொலிஸாருடன் இணைந்து படையினர் கைது செய்தனர். சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.