02nd November 2022 21:01:03 Hours
அனுராதபுரம் போதன வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவின் சத்திரசிகிச்சை நிபுணரின் வேண்டுகோளுக்கு இணங்க முதலாம் படையணியின் 65 வது படைப்பிரிவு படையினர் கடந்த செவ்வாய்க்கிழமை (25) அத்தியாவசிய மருந்துப் பொருட்களை விநியோகித்தனர்.
வெளி நோயாளர் பிரிவிக்கு மருந்துகளை பெற்றுகொள்ள வருபவர்களுக்கும் மற்றும் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படுபவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படக்கூடிய வகையில் 65 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசாத் எதிரிசிங்க அவர்களால் சத்திரசிகிச்சை நிபுணரிடம் கையளிக்கப்பட்டது.
இராணுவத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நாவல கியுல்கிம் (QUALQEM) தனியார் நிறுவனத்தின் தலைவர் திரு.இசுறு விஜேவர்தன இம் மருந்துப் பொருட்கள் பெற்றுகொள்ள அனுசரணை வழங்கினார். அதற்கமைய 65 வது படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் ஜேடியுடி குமார அவர்களின் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பில் கட்டளை அதிகாரியினால் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.