Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd November 2022 21:36:47 Hours

தேசிய பளுதூக்கும் போட்டியில் இராணுவ பளுதூக்கும் வீரர்கள் சம்பியன்

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை (29) இடம் பெற்ற தேசிய பளுதூக்கும் போட்டி-2022 நிகழ்வில் இலங்கை இராணுவ பளுதூக்கும் வீரர்கள் 4 தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை பெற்று சம்பியன்ஷிப்பை வென்றனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள விளையாட்டுக் கழகங்களின் போட்டியாளர்கள் பங்குபற்றிய இப்போட்டியில் சிறந்த பளுதூக்கும் வீரராக அதிகாரவணையற்ற அதிகாரி II, எஸ்கேஎஸ் பிரதீப் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை பளுதூக்கும் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டியில், பெண்கள் பிரிவில் 47, 52, 57, 63, 72, 84 கிலோ மற்றும் 84 கிலோவுக்கும் அதிகமான எடைப் பிரிவுகளும், ஆண்களுக்கான எடைப் பிரிவில் 59, 66, 74, 83, 93, 105, 120 கிலோ மற்றும் 120 கிலோவுக்கு மேல் உள்ள பிரிவுகளும் அடங்கும்.