Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd November 2022 21:20:58 Hours

பௌத்த பிக்குவின் வேண்டுகோளுக்கமைய படையினரால் மல்லிகை கன்றுகள் நாட்டும் பணி

விகாராதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க கலல்பிட்டிய, தத்துகந்த ஸ்ரீ ஜினேந்திரராம ராஜா மகா விகாரை வளாகத்தில் இரண்டாம் கட்டமாக மல்லிகை கன்று நடும் பணிகள் 141 வது பிரிகேடின் 6 வது இலங்கை பீரங்கி படையணியின் படையினரால் திங்கட்கிழமை (31) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் 14 வது படைப்பிரிவின் தளபதி, 141 வது காலாட் பிரிகேட் தளபதியின் ஆகியோரின் வழிக்காட்டல் மற்றும் ஆசிர்வாதத்துடன் 1000 கன்றுகளை நடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. முதற்கட்டமாக சுமார் 500 கன்றுகள் படையினரால் நாட்டப்பட்டது.

மேலும், இத்திட்டத்தை இலங்கை பீரங்கிப் படையணியின் 6 வது களப் படையணியின் கட்டளை அதிகாரியின் நெருக்கமான கண்காணிப்பில் விகாரையின் பிக்குகளுக்கு கன்றுகள் வழங்கப்பட்டன.