01st November 2022 17:24:15 Hours
பாடசாலை அதிபர் மற்றும் ஊழியர்களின் வேண்டுகோளுக்கிணங்க 10 வது இலங்கை சமிஞ்சை படையணியின் பயிற்றுவிப்பாளர்களால் 60 மாணவ தலைவர்கள் மற்றும் தரம் 5 மாணவர்களுக்கு 'தலைமைத்துவம்' தொடர்பான முழு நாள் பயிற்சிப் பட்டறை சனிக்கிழமை (29) மீகொட தர்மராஜ வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
இத்திட்டமானது இராணுவத் தளபதியின் ஆசீர்வாதத்துடன், மாணவர்களின் தலைமைத்துவப் பண்புகளை மேன்படுத்தவும், சவால்களை எதிர்கொள்ளவும் திறமைகள் மற்றும் திறன்களை ஒழுக்கத்துடன் மேம்படுத்தவும் நோக்கமாக கொண்டு முன்னெடுக்கப்பட்டது.
10 வது இலங்கை சமிஞ்சை படையணியின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் வழிகாட்டுதலின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப் பயிற்சியில் உடல் பயிற்சிகள், விரிவுரைகள், கலந்துரையாடல்கள் மற்றும் ஏனைய குழு பயிற்சி நடவடிக்கைகள் என்பன உள்ளடங்கியிருந்தன.